நாளை முதல் 4 நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை..!

நடப்பு கல்வியாண்டை பொறுத்தவரை டிசம்பரில் மழை விடுமுறை அதனைத் தொடர்ந்து அரையாண்டு விடுமுறை, அதன்பிறகு புத்தாண்டு, பொங்கல் விடுமுறைமுடிந்து இப்போது தான் மாணவர்கள் பள்ளி செல்லத் தொடங்கியுள்ளனர் .இந்த வாரம் மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை. அந்த வகையில் ஜனவரி 25ம்தேதி தைப்பூசம் அரசு விடுமுறை நாளாகும். இதே போல் மறுநாள் ஜனவரி 26 குடியரசு தினம் என்பதால் அன்றும் விடுமுறை தான். இதன் மூலம் வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அரசு ஊழியர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
4வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கும் விடுமுறை நாள். தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதனையடுத்து சென்னை மற்றும் கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுலா தலங்களுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதக் கூடும்.