1. Home
  2. தமிழ்நாடு

ரூ.34.50 பைசா அபராதம் விதித்த வங்கி...ரூ.34,500-யை இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு..!

1

கோவை, வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவரது மனைவி யசோதா (62). இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2017 மே மாதத்தில் அவரது சேமிப்பு கணக்கில் ரூ. 831-ம், ஃபிக்சட் டெபாசிட் கணக்கில் ரூ. 1,44,000-ம் இருந்துள்ளது.

இதனிடையே, கடந்த 2017 மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக்கூறி ஒவ்வொரு மாதத்துக்கும் ரூ. 50 முதல் 60 வரை அபராதம் விதித்து, சேமிப்பு கணக்கிலிருந்து வங்கி பிடித்தம் செய்துள்ளது. இவ்வாறு அபராதம் விதித்தது தவறு என வாடிக்கையாளர் வங்கியில் கேட்டபோது 2018 ஜனவரி முதல் வாரத்தில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வங்கி மீண்டும் அவரது கணக்கில் வரவு வைத்துள்ளது. ஆனால் 2018 பிப்ரவரி மாதத்துக்கு பிடித்தம் செய்த அபராத தொகையை வங்கி திரும்ப வழங்கவில்லை.

இதனால் யசோதா தனது கணவர் மூலமாக கடந்த 2018ம் ஆண்டு, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கி மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவான விசாரணைக்காக 2022 ஜூலை மாதம் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்ததையடுத்து நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், வங்கியின் தவறை சுட்டிக்காட்டி வாடிக்கையாளர் யசோதாவின் கணவர் சண்முகசுந்தரம் (65), வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், கணவருக்கு வேறு வேலை இல்லாததால் தீய வழியில் பணம் சம்பாதிக்க, வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்று வங்கி நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது நுகர்வோர் உரிமைகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக்கூறி வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொண்ட ரூ. 34.50 மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.34,500-யை 4 வாரங்களுக்குள், வங்கி வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

Trending News

Latest News

You May Like