1. Home
  2. தமிழ்நாடு

இன்று இரவு பக்தர்களுக்கு தடை.. கலெக்டர் அதிரடி ஆர்டர்..!

இன்று இரவு பக்தர்களுக்கு தடை.. கலெக்டர் அதிரடி ஆர்டர்..!


வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெறும் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்குமாறு கலெக்டர் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியே கூடுவதை தவிர்க்க வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதியிலும் புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி தேவாலயத்தில் புத்தாண்டு தொடக்க ஆராதனை திருப்பலி நிகழ்ச்சியில் பக்தர்கள் நேரடியாக வருவதைத் தவிர்க்க வேண்டும். தேவாலயம் மூலம் ஒளிபரப்பப்படும் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சி வழியாக வீடுகளில் கண்டுகளிக்க வேண்டும்” இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like