1. Home
  2. தமிழ்நாடு

பாபா வங்காவின் பகீர் கணிப்பு! 2025 ஆம் ஆண்டில் ஏராளமான மக்கள் உயிரிழப்பார்கள்..!

1

1900 ஆம் ஆண்டுகளில் பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்கா தன்னுடைய சிறுவயதில் ஏற்பட்ட புயலில் சிக்கிய அவர், கண்பார்வையை இழந்ததாகவும் ஆனால் அதன்பிறகு எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் சக்தியை பெற்றதாகவும் கூறப்படுகிறது.பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார். உலக நிகழ்வுகள் குறித்த அவரது கணிப்புகள் தற்போது வரை அப்படியே நடந்து வருகிறது.

இந்நிலையில் வரும் ஆண்டுகள் குறித்த பாபா வங்கா கணிப்புகள் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் ஏற்படும் என்றும், இதன்மூலம் அந்த கண்டத்தில் ஏராளமான மக்கள் உயிரிழப்பார்கள், பெரும் மக்கள் தொகை குறையும் என்றும் கணித்துள்ளார்.

இந்த 2024 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்படுவார் என்றும் பாபா வங்காவின் கணிப்பு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2028 ஆம் ஆண்டில், மனிதர்கள் வெள்ளிக் கிரகத்தை அடைவார்கள் என்றும் அதில் புதிய ஆற்றல் மூலங்கள் கண்டறியப்படும் என்றும் கணித்துள்ளார். 2033 இல், பூமியின் துருவப் பகுதிகளில் பனி உருகும் என்றும் இதனால் பூமியின் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2076 ஆம் ஆண்டுக்குள், மீண்டும் உலகத்தை கம்யூனிசம் ஆளும் என்றும், 2130 இல் வேற்று கிரகவாசிகளுடனான தொடர்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 3005 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் போர் மூளும் என்றும் 3797 இல் பூமியின் அழிவு தொடங்கும் என்றும் கணித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like