1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி கோவிலில் 12-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி..!

11

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 18-ம்தேதி முதல் 26-ம்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோவிலை தூய்மை செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 12-ம் தேதி (செவ்வாய்) நடைபெற உள்ளது.

அன்று அதிகாலை பூஜைகளுக்குபின் காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படும். தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். 

இதனால் அன்று சுமார் 5 மணி நேரம் வரை பக்தர்கள் இலவச தரிசனம் உள்பட அனைத்து தரிசனமும் நிறுத்தப்படும். இதையடுத்து 11 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

Trending News

Latest News

You May Like