1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்திற்கு..! இனி யாரும் தொந்தரவு செய்ய முடியாது..!

1

ரயில் பயணத்தின் போது பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்க்க டிக்கெட் பரிசோதகர் (TTE) பல முறை வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் பயணிப்பவர்களின் தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே இப்போது விதிகளில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இரவில் ரயிலில் பயணம் செய்யும் போது டிக்கெட் பரிசோதகர் நள்ளிரவில் டிக்கெட்டுகளை சரிபார்க்க வருவதாகவும், இது அவர்களின் தூக்கத்தை தொந்தரவு செய்வதாகவும் பல பயணிகள் புகார் கூறுகின்றனர்.

இது தொடர்பாக இந்திய ரயில்வே தெளிவான விதிமுறைகளை வகுத்து பயணிகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. IRCTC விதிமுறைகளின்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் டிக்கெட்டுகளை சரிபார்க்க டிக்கெட் பரிசோதகர்களுக்கு அனுமதி இல்லை. இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் நிம்மதியாக தூங்குவதை உறுதி செய்வதற்காக இந்த விதிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இரவு 10 மணிக்குப் பிறகு ரயிலில் ஏறும் பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்க்க டிக்கெட் பரிசோதகர்களுக்கு விதிமுறைப்படி அனுமதி உள்ளது.

அதேபோல, காரணமே இல்லாமல் பயணிகளைத் துன்புறுத்தும் அல்லது இரவு 10 மணிக்குப் பிறகு மீண்டும் மீண்டும் டிக்கெட் கேட்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு எதிராக புகார் அளிக்க இந்திய ரயில்வே ஒரு உதவி எண்ணையும் தொடங்கியுள்ளது. ரயில் பயணிகள் 139 என்ற உதவி எண்ணை அழைத்து இது தொடர்பாக புகார் அளிக்கலாம். ரயில் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே இந்த விதிமுறையை கண்டிப்பாக செயல்படுத்த முயற்சிக்கிறது.

வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் பகல் மற்றும் இரவு நேரத்தில் இயங்கும் இந்த சேவை குறித்து பயணிகள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரயில்வே கூறியுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக இதுபோன்ற நிறைய விதிமுறைகளும் வசதிகளும் உள்ளன. ஆனால் நிறையப் பேருக்கு அதுபற்றி சரியாகத் தெரிவதில்லை. எனவே ரயில் பயணம் செய்வதற்கு முன்பு இதுபோன்ற விதிமுறைகள் மற்றும் வசதிகள் பற்றி தெரிந்துகொள்வது நல்லது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் இந்திய ரயில்வே தொடர்ந்து கவனம் செலுத்து வருகிறது. பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு புகார் அளிக்கவும், அதற்கான புகார்களைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதிலும் இந்திய ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.

Trending News

Latest News

You May Like