விமான நிலையம் செல்பவர்களின் கவனத்துக்கு..! மே 1 முதல் புதிய நடைமுறை அமல்..!

இந்திய நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தனிநபர்கள் தங்களுடன் ஆபரணங்களை எடுத்துச் சென்று, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை அனுமதிப்பது தொடர்பாக, மும்பை சுங்கத்துறை அதிகாரிகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.
புதிய முயற்சியானது, குறிப்பாக வளரும் ஏற்றுமதியாளர்களுக்கு, சர்வதேச சந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆபரணங்களை எடுத்துச் செல்ல உதவும்.
மேலும், விமானத்தில் கைப்பையில் நகைகளை எடுத்துச் செல்வதற்கான விதிமுறைகள் குறித்து உதவுவதற்காக, மும்பை விமான நிலையத்தில் சிறப்பு மையத்தை அமைத்து உள்ளோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.