திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..! மெமு ரயில்கள் மார்ச் 17 வரை ரத்து..!

மகா கும்பமேளாவுக்காக நாடு முழுவதும் வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் மெமு ரயில்களின் பெட்டிகள் தெற்கு மத்திய ரயில்வேக்குள்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதில், திருப்பதி காட்பாடி, காட்பாடி ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் மார்ச் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரயில் இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 15 வரையிலும், காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு காலை 6.10 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ரயில் மார்ச் 16 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல். திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரயில் காலை 10.35 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 16 வரையிலும், காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் மெமு ரயில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 17 வரை ரத்து செய்யப்படகிறது.
மேலும் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் மெமு ரயில் காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 17 வரையிலும், ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரயில் பிற்பகல் 12.55 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 17 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.