பக்தர்கள் கவனத்திற்கு..! நாளை முதல் ஜூலை 15 வரை திருப்பதி தரிசனத்திற்கு புதிய விதிகள்..!

கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வரிசையில், மே 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மிக முக்கிய பிரமுகர்கள் மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், விஐபி பிரேக் தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்களை மே 3ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை கொடுக்க வேண்டாம் எனவும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.மீறி கொடுத்தால் அந்த சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 1-ந்தேதி முதல் சாமி தரிசனத்துக்காக திருமலைக்கு வரும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் காலை 6 மணிக்கு சாமி தரிசனம் செய்யும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதற்கு, வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.