1. Home
  2. தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி உட்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி !!

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி உட்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி !!


சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி உள்ளிட்ட 8 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் (39) கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர், தனது குடும்பத்திருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்பு அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றினர்.

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐஸ்வர்யம் கார்டன் பகுதியில் ரமேஷ் ரூ.1½ லட்சம் பணம், குத்தகைக்கு கொடுத்து குடியிருந்து வந்ததாகவும், ஆனால், குத்தகை காலம் முடிந்தும் வீட்டின் உரிமையாளர் பணத்தை திரும்ப தரவில்லை என்றும், இது தொடர்பாக ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர். இதனால் அவர்கள் தங்களது குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதாக தெரியவந்தது.

இதேபோன்று, தனது விவசாய நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரி, பனமரத்துப்பட்டி அருகே திப்பம்பட்டி காமராஜர் காலனியைச் சேர்ந்த பழனி என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் 8 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like