1. Home
  2. தமிழ்நாடு

குருமா தராத சப்பாத்தி கடைக்காரர் மீது தாக்குதல்.. பிடிவாத வாடிக்கையாளரால் ஏற்பட்ட சோகம் !

குருமா தராத சப்பாத்தி கடைக்காரர் மீது தாக்குதல்.. பிடிவாத வாடிக்கையாளரால் ஏற்பட்ட சோகம் !


மதுரையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பி.டி ராஜன் சாலையில் சப்பாத்தி கார்னர் என்ற கடை உள்ளது. இக்கடை அப்பகுயில் மிகவும் பிரபலம். சப்பாத்தி கடைக்கு அருகில் பர்மா இடியாப்ப கடை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் இடியாப்ப கடைக்கு சாப்பிட சென்றுள்ளார். அவர் அங்கு பணியாற்றும் சிவாவிடம் இடியாப்பத்திற்கு குருமா வேண்டும் கேட்டுள்ளார். ஆனால் இடியாப்பத்திற்கு தேங்காய் பால் மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இருப்பினும் அந்நபர் எனக்கு குருமா தான் வேண்டும் என கேட்டதால், பணியாளர் சிவாவும் அருகில் உள்ள சப்பாத்தி கார்னர் கடைக்கு சென்று சிறிது குருமா தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அங்கு பணியாற்றிய ராஜ்குமார் என்பவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவா மற்றும் இடியாப்ப கடையில் பணியாற்றும் மற்றொரு பணியாளரான சரவணன் ஆகியோர் இணைந்து ராஜகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் சிவா மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். எனினும் வரும் காலங்களில் இதுபோன்று சண்டையிடக்கூடாது என எச்சரித்து இருவரையும் சொந்த பிணையில் விடுவித்தனர்.

மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பிரபல கடைகளின் பணியாளர்கள் குருமாவிற்காக சண்டையிட்ட சம்பவம் கைது வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like