1. Home
  2. தமிழ்நாடு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை !

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை !


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் மட்டம் உயர்வதோடு விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருவமழை தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதிகளில் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை !

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி கோயம்புத்தூர் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சென்னை காஞ்சிபுரம் வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை !

.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like