1. Home
  2. தமிழ்நாடு

என் 21வது வயதில் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்... பிரபல நடிகை உருக்கம்!

1

சன் டிவியில் ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் ஸ்வர்ணமால்யா. 12வது படித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அதன் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் ‘அலைபாயுதே’ படத்தில் ஷாலினிக்கு அக்காவாக இவர் நடித்திருந்ததும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில், தனது திருமண வாழ்வு, விவாகரத்தால் ஏற்பட்ட விரக்தி ஆகியவை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் ஸ்வர்ணமால்யா.

அவர் பேசியிருப்பதாவது, “21 வயதில் எனக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. அவருக்கு 25 வயதுதான் அப்போது. அந்த வயதில் சரி, தவறு எது என எங்களுக்குத் தெரியவில்லை. விவாகரத்தான பிறகு என்னைவிட என் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டார்கள். நான் கஷ்டப்படக்கூடாது என்று என்னை அவர்கள் படிக்க சொன்னார்கள். அந்த சமயத்தில் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.

இது எல்லாம் ஒரு வாழ்க்கையா? எதற்கு இப்படி வாழ்கிறோம் என்று தோன்றியது. அதன் பிறகு என் தங்கை என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார். மன அழுத்தத்திற்காக இரண்டு மாதம் மருந்து எடுத்துக்கொண்டேன். இப்போது நன்றாக இருக்கிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like