விமானம் குலுங்கியதால் 40 பயணிகள் காயம்..!
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து புறப்பட்ட ஏர் யூரோப்பா விமானத்தில் 325 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் போயிங் 787–9 ட்ரீம்லைனர் ரகத்தை சேர்ந்தது. இந்த விமானம் சென்று கொண்டிருந்த போது திடீரென நடுவானில் குலுங்கியது. இது குறித்து அருகாமையில் இருந்த விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு கருதி பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. காயமடைந்த பயணிகளில் 30 பேருக்கு விமான நிலையத்தில் வேண்டிய மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும், 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என ஏர் யூரோப்பா மற்றும் உள்ளூர் விமான நிலைய தரப்பும் உறுதி செய்துள்ளது. பயணிகள் மாற்று விமானம் மூலம் உருகுவே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஏர் யூரோப்பா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
#INCIDENTE | Al menos 30 pasajeros resultaron heridos cuando el vuelo UX045 de Air Europa, un Boeing 787-9 que viajaba de Madrid a Montevideo, encontró severas turbulencias temprano esta mañana.
— Aviación Guayaquil (@AviacionGYE) July 1, 2024
Tras el incidente, el vuelo fue desviado a Natal, Brasil, donde los heridos… pic.twitter.com/ksXFTxB49d