1. Home
  2. தமிழ்நாடு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய வீரர்களுக்கு 5 லட்சம் பரிசு..!

1

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை  ஹாக்கி போட்டி தொடர் நடைபெற்று வந்தது. 

இதையடுத்து நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் 1-1 என்ற கோல் கணக்கில் இந்தியா - மலேசியா அணிகள் சமனில் இருந்தன. தொடர்ந்து நடைபெற்ற 2-வது சுற்றின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியா அணி முன்னிலை பெற்றிருந்தது.

2 கோல்கள் பின் தங்கியிருந்தநிலையில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து 3-3 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்து அசத்தியது. தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 4-வது முறையாக ஆசிய சாம்பியன் ஆக்கி கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோல்வியையே சந்திக்காத இந்தியா அணி 4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வழங்கினர்.

4வது முரையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, தமிழக அரசு சார்பில் வீரர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 2 1/2 லட்ச ரூபாய் பரிசு தொகை என மொத்தமாக தமிழக அரசு சார்பில் 1.10 கோடி ரூபாய் அளவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. அதே போல ஹாக்கி இந்தியா அமைப்பில் இருந்து வீரர்களுக்கு 3 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 1 1/2 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like