1. Home
  2. தமிழ்நாடு

இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!

1

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கு தலைமையேற்று கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அங்கு பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியுமளிக்கிறது. திமுக பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணம் அதிகரிப்பு என எங்கும் அவலங்களாகவே இருக்கிறது என்றார்.

மேலும் , காற்றை எப்படி தடை செய்யமுடியாதோ அதேபோல மக்கள் உணர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என்றும்,அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்து முதல்வர் அடக்குமுறையைக் கையாளுகிறார். நான் ஒரு மருந்து பெயரைச் சொன்னேன். அந்த மருந்தை வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்னைக் கிண்டல் செய்கிறார்.

ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல. இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது. காவல் நிலையம், நீதிமன்றம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரத்திற்கு திமுக அரசு தான் காரணம். இந்த விவகாரத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும்.

ஆனால் இங்குள்ள காவல்துறை, தனி நபர் ஆணையம் மூலம் நீதி கிடைக்காது. கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும். எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரை நாளை அதிமுக குழு சந்திக்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like