பொதுச் செயலாளராக.எம்.ஏ. பேபி தேர்வு..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி கடந்த ஆண்டு செப்., 12ல் உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு சில நாட்களுக்கு பின்னர் நடந்த அக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், இந்தாண்டு மதுரையில் நடக்கும் அகில இந்திய மாநாட்டில் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வரை கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழுவின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. இக்கூட்டத்தில், பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பொதுச் செயலாளராக.எம்.ஏ. பேபி, தேர்வு செய்யப்பட்டார். இது குறித்த அறிவிப்பை கேரள முதல்வர் பினராய் விஜயன், பிரகாஷ்காரத் ஆகியோர் அறிவித்தனர்.