1. Home
  2. தமிழ்நாடு

நிறுத்தப்பட்ட அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலைய சேவை மீண்டும் தொடக்கம்..!

1

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (29.11.2023) மதியம் 1:45 மணி முதல் 2.15 மணி வரை வடபழனி, அரும்பாக்கம் மற்றும் புரட்சித்தலைவி டாக்டர். ஜெ.ஜெயலலிதா புறநகர்ப் பேருந்து நிலைய மெட்ரோ இரயில் நிலையங்களில் தற்காலிகமாக மெட்ரோ இரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரை பராமரிப்பு பணிகள் முடிந்து, பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பலத்த காற்றின் காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை மெட்ரோ இரயில் ஊழியர்கள் சரிசெய்தனர். தற்போது இரண்டு வழித்தடத்திலும் மெட்ரோ இரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது. 

Trending News

Latest News

You May Like