1. Home
  2. தமிழ்நாடு

அருள்மிகு மயிலேறி முருகன்  திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

அருள்மிகு மயிலேறி முருகன்  திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மலை உச்சியில் உள்ள அருள்மிகு மயிலேறி முருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள வேலாயுதம் நகரில் மலை உச்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மயிலேறி முருகன் சமேத வள்ளி தேவஸ்தான திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை, கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், சுவாமி தரிசனம் செய்ய வந்த அனைவர் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பி.ஜே.பி மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட செயலாளர் கமலம் மற்றும் கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like