1. Home
  2. தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை... தமிழக அரசின் தோல்வி - எல்.முருகன் விமர்சனம்!

1

சென்னையில் ஒரு தேசிய இயக்கத்தின் தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையை வைத்தது. அரசியல் நோக்கத்திற்காக கொலை நடைபெறவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது. ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாகவே இந்த கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் சரண் அடைந்த நிலையில், தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், “பகுஜன் சாமஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே பாதுகாப்பு இன்றி படுகொலை செய்யப்பட்டுள்ளது தமிழக அரசின் தோல்வியை காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதாகத் தெரிவித்த எல்.முருகன், “சட்டம் ஒழுங்கை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை. அதனை துளிகூட மதிக்கவில்லை. காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டார்.

சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

Trending News

Latest News

You May Like