இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!
மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (26-04-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம்:
வடக்கன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் கால்கரை, வேப்பிலாங்குளம், வடக்கு பெருங்குடி, தெற்கு பெருங்குடி, லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம், அழகனேரி, அடங்கார் குளம், சிவசுப்பிரமணியபுரம், சங்குநகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும், காற்றாலைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.