1. Home
  2. தமிழ்நாடு

ரூம் போட்டு யோசிப்பாங்களோ..?: கேமராக்களுக்கு பெயின்ட் அடித்து ஏடிஎம்மில் ரூ.41 லட்சம் கொள்ளை..!

ரூம் போட்டு யோசிப்பாங்களோ..?: கேமராக்களுக்கு பெயின்ட் அடித்து ஏடிஎம்மில் ரூ.41 லட்சம் கொள்ளை..!


ஆந்திராவில், ஏடிஎம் மையத்தில் உள்ள கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்து ரூ.41 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், கடப்பா நகரில் உள்ள 2 ஏடிஎம் மையங்களில் ரூ.41 லட்சம் துணிகர திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில், சிந்தகொம்ம திண்ணா கேஎஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி அருகே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் இரவு திருடர்கள் புகுந்து அங்குள்ள சில கண்காணிப்பு கேமராக்களில் கருப்பு பெயிண்ட் பூசி, ஏடிஎம்மில் இருந்த ரூ.17 லட்சத்தை திருடிச் சென்றுள்ளனர்.

அடுத்ததாக, ரிம்ஸ் மருத்துவமனை கூட்டு ரோட்டில் உள்ள மற்றொரு எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.24 லட்சத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கடப்பா நகர போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏடிஎம் மையத்தில் உள்ள கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்து ரூ.41 லட்சம் கொள்ளை |  Robbery at ATM center - hindutamil.in
இதில், முதல் திருட்டு நடந்த கேஎஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் ஒரு கார் முற்றிலுமாக எரிந்த நிலையில் காணப்பட்டது. இந்த காருக்கும், திருட்டு சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ ? எனும் கோணத்திலும் போலீசார் வழக்கு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like