கோவை மக்களே ரெடியா ? நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25, 2025) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இதில் 10ம் வகுப்பு, +2, ஐ.டி.ஐ., டிப்ளமோ பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தங்களின் சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க அனுமதி இலவசமாக வழங்கப்படும், பங்கேற்க வயது வரம்பு கிடையாது.
இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களிடம் உள்ள பணிக்காலியிடங்களுக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு - 0422-2642388.