1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களே ரெடியா ? விரைவில் தொடங்குகிறது புத்தகக் கண்காட்சி…!

1

வருகிற 27 ஆம் தேதி 48-வது புத்தக கண்காட்சி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் புத்தக கண்காட்சியைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி திறந்து வைக்க உள்ளார்.

புத்தக கண்காட்சியின் துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்குக் கலைஞர் பொற்கிழி விருதுகளைத் துணை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

டிசம்பர் 27 ஆம் தேதி துவங்கும் புத்தக கண்காட்சி ஜனவரி 12 ஆம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படவுள்ளன.

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறுவது வழக்கம்.

தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களைக் காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது.

Trending News

Latest News

You May Like