1. Home
  2. தமிழ்நாடு

இன்று நீட் தேர்வு எழுத போறீங்களா? மறந்தும் இந்த விஷயங்களை பண்ணிடாதீங்க..!

1

மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்பதால் மாணவர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

 

பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது நாடு முழுவதும் இந்த தேர்வை 23 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. சென்னையில் மட்டும் 41 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம் நீட் தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என nta கூறியுள்ளது.

மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் சுமார் 15 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெறுகிறது.

நீட் தேர்வு தொடர்பாக முறைகேடுகளை தடுக்க மாணவ மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவிகள் அந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஹால் டிக்கெட், எழுதுகோல் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகள் மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடி, தாயத்து, பெல்ட் அணியக்கூடாது.

உயரம் குறைந்த ஹில்ஸ் இல்லாத செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. நண்பகல் ஒரு மணி முதலே கடும் சோதனைகளுக்கு பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

Trending News

Latest News

You May Like