1. Home
  2. தமிழ்நாடு

ஜனவரி மாதம் திருப்பதி போறீங்களா ?அப்போ இதை படிச்சிட்டு போங்க..!

1

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக வார இறுதி நாட்கள், பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகள், பண்டிகை நாட்களில் திருப்பதி ஏழுமலையான்கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய 2 மாதங்களுக்கு முன்பே திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இணையதளத்தில் டிக்கெட்டுகள் வெளியிடப்படும். இதன் முலம் ஏராளமான பக்தர்கள் தங்களின் பயண திட்டத்தை வகுத்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான டிக்கெட் முன்பதிவுக்கான தேதியை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜனவரி மாதம் ஏழுமலையான தரிசிப்பதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இம் மாதம் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, பத்மாராதனை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கள் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் வரும் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு முதல் 20 ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தானத்தின் வெப்சைட்டில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like