1. Home
  2. தமிழ்நாடு

வெளிநாடு போறீங்களா ? உடனே மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடுங்க - மா.சுப்பிரமணியன்..!

1

சென்னை கோட்டூர்புரம் சிக்னல் மற்றும் கோட்டூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் திமுக சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தர்பூசணி, கிர்ணி பழம் மற்றும் மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், “கோடைகாலத்தில் தண்ணீர், மோர், இளநீர், தர்பூசணி, கிர்ணிபழம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

 

ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் தென் அமெரிக்காவில் ஒரு சில நாடுகளுக்கும் செல்வதற்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அப்போது தான் விமான நிலையத்தில் அந்த நாடுகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கும். அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பும் போதும் இந்த தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்த பிறகு தான் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதற்காக கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் ஏற்கனவே இந்த மஞ்சள் வேக்சினேஷன் போடப்பட்டு வந்தது. அதேபோல தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மஞ்சள் வேக்சினேஷன் போடப்பட்டு வந்தது. ஆனால் இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் தனியார் மருத்துவமனையில் மஞ்சள் வேக்சினேஷன் போடும்போது அதை விமான நிலையங்களில் அனுமதிப்பதில்லை.

கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் அமைக்கப்பட்டிருப்பது போல துறைமுகம் மருத்துவமனை வளாகத்திலும் அதே போல தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் இருக்கக்கூடிய அந்த மையத்திலும் மஞ்சள் வேக்சினேசன் போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த வேக்சினேஷன் போடாமல் அரசு சார்பாக ஏற்படுத்தி இருக்க கூடிய இந்த இடங்களில் வேக்சினேஷன் போட்டு கொள்ள வேண்டும்.

மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியை அரசு அறிவித்துள்ள இடங்களில் போட்டால் மட்டுமே விமான நிலையங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like