நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளரா..! உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி..!

வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுக்கு விருப்பமான இந்திய மொழிகளில் அழைப்புகளையும் எஸ்எம்எஸ் செய்திகளுக்கான ஸ்பேம் எச்சரிக்கைகளையும் பெறலாம். இந்தப் புதிய அம்சம் பத்து உள்ளூர் மொழிகளில் கிடைக்கிறது. எதிர்காலத்தில் மேலும் பல மொழிகளைச் சேர்க்கும் திட்டமும் உள்ளது. ஏர்டெல்லின் AI-யால் இயக்கப்படும் கருவி இப்போது சர்வதேச நெட்வொர்க்குகளில் இருந்து வரும் அனைத்து ஸ்பேம் அழைப்புகளையும் எஸ்எம்எஸ்களையும் திரையிட்டு வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கும்.
உள்நாட்டு ஸ்பேம் அழைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஏர்டெல் தீவிரப்படுத்தியவுடன் மோசடி செய்பவர்களும் ஸ்பேமர்களும் மோசடி அழைப்புகளை இந்தியாவிற்குள் அனுப்ப வெளிநாட்டு நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த ஆபத்தான போக்கு கடந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு ஸ்பேம் அழைப்புகளில் 12 சதவீத அதிகரிப்பை ஏற்படுத்தியது. ஏர்டெல் தனது புதிய அம்சத்தின் மூலம் இந்த வளர்ந்து வரும் சவாலை முறியடிக்கலாம் என்று கருதுகிறது.
இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த பாரதி ஏர்டெல்லின் கனெக்டெட் ஹோம்ஸ் நிறுவனத்தின் மார்க்கட்டிங் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் சர்மா, “வாடிக்கையாளர்களும்ம் அவர்களது கருத்துகளும்தான் நாங்கள் முன்னெடுக்கும் அனைத்திற்கும் மையமாக உள்ளன. வாடிக்கையாளர் கருத்துக்களை கவனமாக ஆராய்ந்த பின் இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு சிறப்பாகச் சேவை செய்ய எங்கள் தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.
மேலும் வெளிநாட்டு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பேம் போக்குவரத்தின் அளவு அதிகரித்து வருவதால் சர்வதேச எண்களில் இருந்து வரும் அனைத்து எஸ்எம்எஸ் செய்திகளையும்ம் தொலைபேசி அழைப்புகளையும் ஸ்கேன் செய்ய எங்கள் AI-யால் இயக்கபப்டும் கருவியை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். எங்களுடைய அர்ப்பணிப்பு மிகுந்த பொறியாளர்களும்ம் தரவு விஞ்ஞானிகள் குழுவும் எங்கள் தயாரிப்புகளை தொடர்ந்து செம்மைப்படுத்தி மேம்படுத்தும். வளர்ந்து வரும் எந்தாவிதமான அச்சுறுத்தல்களையும் முறியடித்து முன்னணியில் இருப்பதை உறுதி செய்யும்” என்றார்.
மேம்படுத்தப்பட்ட AI-யால் இயக்கப்படும் இந்த ஸ்பேம் தீர்வு, இந்தி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, உருது உள்ளிட்ட பத்து இந்திய மொழிகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து பயனர்களுக்கு இப்போது அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தி ஸ்பேம் எச்சரிக்கை அறிவிப்புகளை ஆண்ட்ராய்டு சாதனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மட்டுமே அணுக முடியும். இந்த அம்சங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இலவசமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் சேவை கோரிக்கையை எழுப்பாமலேயே தானாக செயல்படுத்தப்படும்.