1. Home
  2. தமிழ்நாடு

நாய் வளர்பவரா நீங்கள் ? இந்தியாவில் இந்த வகை நாய்களுக்கு கருத்தடை செய்ய உத்தரவு..!

1

சில நாய்கள் ஆக்ரோஷ தன்மை இருப்பதால் பல இடங்களில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.இந்த ஆக்ரோஷ தன்மை கொண்ட வளர்ப்பு நாய்களால் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. 

இந்நிலையில், பீட்டா இந்தியா அமைப்பு நாய்கள் மற்றும் மனிதர்களை பாதுகாக்க வேண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளின் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி, பிட்புல், ராட்வீலர், புல்டாக், டோசா இனு, அமெரிக்கன் டெரியர், ரஷ்யன் ஷெபர்ட், வொல்ஃப் டாக், போஸ் போல், கங்கல், பிலா பிராசிலேய்ரோ, சென்ட்ரல் ஏசியன் செப்பர் டாக், கௌகாசியன் பெப்பர் டாக், சவுத் ரஷ்யன் செப்பர் டாக், ஜப்பனீஸ் டோசா மற்றும் அகீதா, மாஸ்திப்ஸ், ரோடீசியன் ரிட்ஜ்பேக், கேனாரியா, அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன் கோர்ஸோ உள்ளிட்ட நாய்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் இந்த வகை நாய்களை இந்தியாவில் வளர்த்து வருபவர்கள் கருத்தடை செய்யவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like