தர்பூசணி பழங்களில் செயற்கை நிறம் சேர்க்கப்பட்டதா ? உணவு பாதுகாப்பு அதிகாரி சொன்ன முக்கிய தகவல்..!

தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்ததை ஒட்டி, தர்பூசணி விற்பனை படு ஜோராக களைக்கட்டியது.
இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவு சோதனையில் இறங்கியதாகவும் சில கடைகளில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து, மக்களிடையே அச்சம் பரவ தொடங்கியது. தர்பூசணி வாங்குவதையோ, சாப்பிடுவதையோ தவிர்த்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான சதீஷ்குமார் பேசியதாவது,
சென்னை பொறுத்த வரையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு சோதனை செய்துள்ளதாகவும்,தமிழகம் உணவு கலப்படம் இல்லாமல் பாதுகாப்பான மண்டலமாக உள்ளது என தெரிவித்தார் மேலும் தர்பூசணி பழம் உடலுக்கு மிகவும் நல்லது எனவும் சென்னையில் எந்த இடத்திலும் தர்பூசணி பழத்தில் செயற்கை நிறங்கள் கலக்கப்பட்டதாக புகார் வரவில்லை என தெரிவித்தார்
பொதுமக்கள் கவலை இன்றி தர்பூசணி பழத்தை தாராளமாக வாங்கி சாப்பிடலாம் எனவும் செயற்கை நிறங்கள் கலக்கப்பட்டதாக புகார் வந்தால் அதனை உணவு பாதுகாப்புத் துறை கவனித்துக் கொள்ளும் என தெரிவித்தார். நமது விவசாயிகள் சிறப்பான முறையில் தர்பூசணி பழங்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர் எனவும் யாரெல்லாம் கலப்படம் செய்கிறார்களோ அவர்களின் மீது உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
சென்னையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் சென்னையில் சில இடங்களில் மட்டும் எலி கடித்த பழம், அழுகிய பழங்களை உள்ளிட்டவைகளை மட்டுமே அப்புறப்படுத்தி இருப்பதாகவும் மேலும் சென்னையில் செயற்கை நிறங்களை கலக்கப்பட்டதாக எந்த பழங்களும் அப்புறப் படுத்தவில்லை என தெரிவித்தார்..
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உணவு கலப்பட விவகாரத்தில்,உணவுகள் கலப்படமில்லாமல் மிகவும் பாதுகாப்பு மண்டலமாக உள்ளது எனவும் ஒரு சிலர் மட்டுமே தவறு செய்கிறார்கள் அவர்களையும் விரைவில் களை எடுத்தால் தமிழ்நாடு கலப்பட விவகாரத்தில் பாதுகாப்பானதாக மாறும் என தெரிவித்தார். பெரிய கடை சின்ன கடை என்ற வேறுபாடு உணவு பாதுகாப்பு துறைக்கு கிடையாது எனவும் எந்த கடை மீது புகார் வந்தாலும் உணவு பாதுகாப்பு துறை பொதுமக்களுக்காக அங்கு நிற்கும் கூறினார்.