மாணவர்களே ரெடியா ? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்... மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை!

பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15 ந் தேதி நடைபெறும். இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (CBSE/ICSE உட்பட) 11ம் வகுப்பு மாணவர்கள் கலந்துக் கொள்ளலாம்.
இந்த ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடக்கும் இலக்கிய திறனறித் தேர்வுக்கு நாளை முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.