1. Home
  2. தமிழ்நாடு

இந்தியர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா? ப.சிதம்பரம் கேள்வி

1

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவா்களை திருப்பி அனுப்புவதில் அதிபர் டிரம்ப் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் 104 இந்தியா்கள் தாய்நாட்டுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனா். இதன் தொடர்ச்சியாக, 119 இந்தியர்களை நாடுகடத்தும் முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு திரும்ப அனுப்புகிறது. அமெரிக்க விமானம் 119 இந்தியர்களை இன்று கொண்டு வருகிறது. அந்த 119 இந்தியர்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்களா என்பதே கேள்வி.

அவர்கள் கைகளில் விலங்கு போடப்பட்டதா? அவர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா?இந்திய ராஜதந்திரத்திற்குப் பெரிய சவால். இந்திய ராஜதந்திரம் வெல்ல வேண்டும், இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பம் என்று கூறியுள்ளார்" என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார். அதற்கு ஏற்றார்போல், அதிபராக பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் கொத்து, கொத்தமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனா். அதன்படி கடந்த வாரம் 104 இந்தியர்கள், கைதிகள் போல் விமானத்தில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனா்.

இதற்கு இந்திய தவைர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனா். மேலும் அந்த விவகாரத்தில் இந்திய அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பினா். இதற்கிடையே தான் பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு பயணம் செய்தார். அப்போது வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் தொடர்பாக மோடி தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது சட்டவிரோத குடியேற்றத்தை மென்மையான முறையில் கையாள்வதற்கு அறிவுறுத்தப்பட்டது.

Trending News

Latest News

You May Like