மாணவர்களே ரெடியா ? 10, +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் முதன் முதலில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. மார்ச் மார்ச் 3 முதல் 25 வரை 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. அதன்பிறகு மார்ச் 5 முதல் 27 வரை பதினொன்றாம் வகுப்பு தேர்வுகள் நடந்தது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடந்தன. இதில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி பெரும் ஆவலுடன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
திமுக அரசு குறிப்பிட்ட தேதியை சொல்லவில்லை என்றாலும் மே முதல் வாரம், இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு12 ஆம் வகுப்பு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியானது. 10 ஆம் வகுப்பு முடிவுகள் மே 10 ஆம் தேதியும் வெளியானது. அதேபோல் இந்த ஆண்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், ரிசல்ட் அறிவிப்பதற்கான நடைமுறைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.