1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களே ரெடியா ? அரையாண்டு தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு..!

1

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 9-ம் தேதி முதல் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16-ம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக டிசம்பர் 12-ம் தேதி முதல் தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்தது. இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருச்சி, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடுக்கப்பட்டது.

கனமழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மழையின் காரணமாக விடுமுறை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல்லில் ஃபீஞ்சல் புயலால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள், பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

வரும், 24ம் தேதி முதல் ஜனவரி, 1ம் தேதி வரை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மழை பாதித்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் பொருந்தும்.
 

எனவே, அப்பள்ளிகளில் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, ஜனவரி, 2 முதல் 10ம் தேதி வரை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like