1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களே ரெடியா ? இன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்..!

1

தமிழக உயா்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்.சி., பி.காம்., பி.ஏ., என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. 

இதற்கான, 2024-2025-ம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவா்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினா். 

இந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களைப் பெற்றனா். 

இதையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025-ம் கல்வியாண்டுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது. 

தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவா். 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வில் பட்டப்படிப்புக் கான மாணவா் சோ்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள்  ஜூலை 3-ம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like