1. Home
  2. தமிழ்நாடு

என்னை பார்த்து தான் மக்கள் கெட்டுப் போறாங்களா? கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் பேச்சு..!

1


டி.டி.எஃப்.வாசன். 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஏற்கெனவே இவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் இருந்து கோவை செல்லும்போது பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டி.டி.எஃப்.வாசன், விபத்தில் சிக்கினார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டி.டி.எஃப். வாசனை கைது செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்தனர்.

பைக் ரேஸ் பிரியரான. டி.டி.எஃப் வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தனது கார் மூலமாக ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார். அதுவே மதுரையில் அவர் மீது வழக்காக பதிவாகியுள்ளது.

மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக டி.டி.எஃப் வாசன் மீது 6 பிரிவுகளின். கீழ் அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தததுடன் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," கடந்த 15-ம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் டி.டி.எஃப்.வாசன் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவதும் அதை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற ஐ.டி மூலம் யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் கைதான டிடிஎஃப் வாசன் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், விதிகளை மீறியது,  பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காரியத்தை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தன்னை பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப்போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

“என்னை பார்த்து தான் மக்கள் கெட்டுப்போகிறார்கள் என்றால்? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கு.  அதனால் கெட்டுப்போவதில்லையா? சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே. எவ்வளவு பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.  குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வழக்கு என்றால் எனக்கு மட்டும் ஏன் கொலை வழக்கு? எனக்கு நீதி வேண்டும் என நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது டிடிஎப் வாசன் கேள்வி எழுப்பினார்.


 

Trending News

Latest News

You May Like