"Dil Bechara" இசை ஆல்பத்தை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்த ஊரடங்கு காலத்தில் பல திரைப்பிரபலங்கள் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. ஆனால் சுஷாந்த் சிங் என்ற நடிகரின் தற்கொலை அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் சாமானிய மனிதரையும் சோகத்தில் ஆழ்த்தியது என்றே கூறலாம்.
அவருடைய மரணத்திற்கு பல காரணங்கள் கூறபட்டாலும் மரணத்தை தழுவிய சுஷாந்த திரும்ப வரபோவதில்லை என்பதுதான் உண்மை . இந்த நிலையில் சுஷாந்த நடிப்பில் கடைசியாக உருவான 'Dil Bechara' என்ற திரைப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு இசைப்புயல் ரகுமான் அவர்களால் வெளியிடப்பட்டது.
புற்று நோயால் பாதிக்கபட்ட பெண்ணுக்காக அவளோடு இணைந்து போராடும் ஒரு கதாபாத்திரத்தில் சுஷாந்த் நடித்திருப்பதாக இருந்தது.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசை மற்றும் குரலில் உருவாகி இணையத்தை கலக்கி வருகிறது. தற்போது ரசிகர்களுக்காக Dil Bechara படத்தின் ஆல்பம் தற்போது வெளியாகி உள்ளது.
Thank you for your love for the #DilBechara album.https://t.co/6o33ucllsq
— A.R.Rahman (@arrahman) July 13, 2020
#EPI🌹 pic.twitter.com/ja4YWmUTqH
இதனையும் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் தற்போது இணைய வாசிகளை கவர்ந்து வருகிறது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமொழி உள்ளது. அதேபோல் சுஷாந்த மறைந்தாலும் அவரது படம் மூலாமாக வாழ்ந்து வருகிறார்..
newstm.in