உடனே விண்ணப்பீங்க..! சட்டம், பொறியியல் படித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை..!
ரிசர்வ் வங்கியில் கிரேடு பி மற்றும் ஏ பிரிவில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 28 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
பணியின் விவரங்கள்
| பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
| சட்ட அதிகாரி (கிரேடு-பி) | 5 |
| மேனேஜர் (தொழில்நுப்டம் - சிவில்) (கிரேடு-பி) | 6 |
| மேனேஜர் (தொழில்நுட்பம் - எலெக்ட்ரிக்கல்) (கிரேடு-பி) | 4 |
| உதவி மேனேஜர் ( ராஜசபை) (கிரேடு-ஏ) | 3 |
| உதவி மேனேஜர் (பாதுகாப்பு) (கிரேடு-ஏ) | 10 |
| மொத்தம் | 28 |
வயது வரம்பு
- சட்ட அதிகாரி பதவிக்கு 01.07.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 21 வயது முதல் 32 வயது வரை இருக்கலாம். இதில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு 3 வருடங்களும், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு 5 வருடமும் தளர்வு உள்ளது.
- மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
- உதவி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் 30 வயது வரை இருக்கலாம். பாதுகாப்பு பிரிவிற்கு 25 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
- சட்ட அதிகாரி பதவிக்கு இளங்கலை சட்டப்படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்டி,எஸ்சி பிரிவினர் 45% மதிப்பெண்கள் முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சில் பதிவு செய்து 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மேனேஜர் பதவிக்கு சிவில் பொறியியல் மற்றும் எலெக்ட்ரிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- ராஜசபை உதவி மேனேஜர் பதவிக்கு இந்தி பாடத்துடன் கூடிய முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டும் மொழியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
- உதவி மேனேஜர் பதவிக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். 10 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- கிரேடு-ஏ பதவி அதிகாரிகளுக்கு மாதம் அடிப்படை சம்பளம் ரூ.62,500 வழங்கப்படும். அதன்படி, ரூ.62,500 முதல் ரூ.1,26,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
- கிரேடு- பி பதவிக்கு அடிப்படையில் சம்பளம் ரூ.78,450 ஆகும். இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.78,450 முதல் ரூ.1,41,600 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இரண்டு தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாள் 100 மதிப்பெண்களும் என 200 மதிபெண்களுக்கு நடைபெறும். நேர்காணல் 35 மதிப்பெண்களுக்கு என மொத்தம் 235 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். முதல் தாள் கொள்குறி வகையிலும், இரண்டாம் தாள் விரிவாக விடை அளிக்கும் வகையில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
ரிசர்வ் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://opportunities.rbi.org.in/ அல்லது https://www.rbi.org.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்த வேண்டும்.
இதற்கான விண்ணப்பம் ஜூலை 11 முதல் தொடங்கி நிலையில், ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்
| விவரம் | தேதிகள் |
| விண்ணப்பம் தொடங்கும் நாள் | 11.07.2025 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.07.2025 |
| எழுத்துத் தேர்வு | பின்னர் அறிவிக்கப்படும். |
ரிசர்வ் வங்கியில் வேலை எதிர்பார்க்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு ஆன்லைன் வழியே உடனே விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணியிடங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம். தேர்வு குறித்த விவரங்கள் மற்றும அட்மிட் கார்டு ஆகிய இணையதளத்தில் வெளியிடப்படும்.