உடனே விண்ணப்பிங்க! இந்திய ரயில்வேயில் 368 பிரிவு கட்டுப்பாட்டாளர் பணி!
- நிறுவனம்: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
- பணியின் பெயர்: பிரிவு கட்டுப்பாட்டாளர் (Section Controller)
- மொத்த காலியிடங்கள்: 368
- சம்பளம்: ரூ. 35,400
- கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 20 முதல் 33 வயது வரை. குறிப்பிட்ட பிரிவினருக்கு (SC/ST, OBC, PwBD) அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.
- விண்ணப்பக் கட்டணம்:
- SC, ST, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கையர், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் (EBC) – ரூ. 250. கணினி அடிப்படையிலான தேர்வில் (CBT) கலந்து கொண்டால் முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
- மற்ற பிரிவினர் – ரூ. 500. கணினி அடிப்படையிலான தேர்வில் கலந்து கொண்டால் ரூ. 400 திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
தேர்வு முறை மூன்று கட்டங்களைக் கொண்டது:
- கணினி அடிப்படையிலான தேர்வு (CBT): இது முதல் கட்டத் தேர்வாகும்.
- மருத்துவப் பரிசோதனை (ME): தேர்வில் தகுதி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- ஆவணச் சரிபார்ப்பு (DV): இறுதியாக, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: செப்டம்பர் 15, 2025.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14, 2025.
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான தகுதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
.png)