என்ன வேணாலும் நடக்கலாம்.. ஆகஸ்ட்டில் மத்திய அரசு கூட கவிழலாம்: லல்லு பிரசாத்..!
கார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கூறியதாவது, மோடி அரசு பலவீனமாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். ஆகஸ்டில் கவிழலாம். கட்சித் தொண்டர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பீகாரில் இருந்து புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரும்பாலான தலைவர்கள் கலந்துகொண்ட நேரத்தில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 12 எம்.பி.க்கள் உள்ளனா். ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு (16 எம்.பி.க்கள்) அடுத்தபடியாக பாஜக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.