கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும் - முதலமைச்சர்..!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றுவந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று மானியக் கோரிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசிவருகிறார்.
அப்போது சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் ரூ.5 கோடி செலவில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். நுண்ணறிவு பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு கோவை மாநகரில் ரூ.5.98 கோடி மதிப்பில் அலுவலக கட்டிடம் கட்டப்படும் என இன்று அவர் அறிவித்திருக்கிறார்.