1. Home
  2. தமிழ்நாடு

பாஜக மாநில தலைவரின் கோரிக்கையை ஏற்று காலணி அணிந்தார் அண்ணாமலை..!

Q

தமிழக பா.ஜ., மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். சென்னை வானகரத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ.,வின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனை அண்ணாமலை கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறினார். அப்போது, தி.மு.க., அரசுக்கு எதிராக காலணி அணியாமல் இருந்து வந்த அண்ணாமலைக்கு, மேடையிலையே நயினார் நாகேந்திரன் ஒரு கோரிக்கை வைத்தார்.
தான் வாங்கி வந்த காலணியை கொடுத்து, இதனை அணிந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அண்ணாமலையும் அவரது கோரிக்கை ஏற்று, மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணியை அணிந்து கொண்டார்.

Trending News

Latest News

You May Like