திமுகவிற்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை : இதுவரை மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குக!
முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெண்கள், மகளிர் உமைத் தொகை வேண்டி மனுக்களை கொடுக்க குவிந்து வருகின்றனா். இந்த நிலையில் திமுக ஆட்சியில் உரிமைத் தொகை பெறாத பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.50 ஆயிரம் வழங்கிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், திமுக அரசின் எண்ணமும் செயலும் பலமுறை முரணாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும், இத்திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்தவில்லை. இதற்கான காரணமாக, "தகுதியுள்ள மகளிருக்கே மட்டுமே இந்தத் தொகை வழங்கப்படும்" என கூறி, பலரை அந்த உதவியிலிருந்து விலக்கிவிட்டனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான், தமிழக அரசு இந்த உதவித்தொகை திட்டத்தை ஆரம்பித்தது. ஆனால் அதிலும் மகளிரில் வெறும் சிலருக்கு மட்டுமே உதவி கிடைத்ததாக அண்ணாமலை தெரிவிக்கிறார். தகுதியின்மை என்ற பெயரில் ஏராளமான பெண்கள் நிராகரிக்கப்பட்டனர் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இப்போது, தேர்தல் காலம் நெருங்கும் சூழ்நிலையில், திமுக அரசு மீண்டும் அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தகுதி இல்லை என கூறிய திமுக, இப்போது எல்லா பெண்களும் தகுதியானவர்களாக எப்படித் திடீரென மாறினார்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்புகிறார்.இது ஒரு தேர்தல் யுக்தியாகவே பார்க்கப்படுகிறதென்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மகளிரின் மனதை மாற்றும் நோக்கத்தில் இந்தக் குழப்பமான அறிவிப்பை அரசு வழங்குவதாக அவர் பரவலாக விமர்சிக்கிறார். அதே நேரத்தில், மகளிர் சமூகம் திமுக அரசின் மீது உள்ள அதிருப்தியை இது மாற்ற முடியாது என்றும், மக்கள் திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரமாட்டார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அவர் ஒரு தீர்வு வழியையும் முன்வைத்துள்ளார். திமுக அரசு உண்மையில் மகளிரை மேம்படுத்த விரும்பினால், தங்களது ஆட்சி தொடங்கிய 2021-இல் இருந்தே விலகிய 50 மாதங்களுக்கு ரூ.1000 வீதம் தொகையாக மொத்தம் ரூ.50,000-ஐ ஒவ்வொரு பெண்ணுக்கும் வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்துகிறார்.இந்த நிலுவை தொகை மட்டுமே உண்மையான நியாயமாக அமையும் என்றும், இது தான் மகளிரின் நம்பிக்கையை திரும்பப் பெறும் ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுப்போம் எனப் போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து, பலமுறை, நாம் இந்த திட்டம் செயல்படுத்தப்படமால் இருப்பதை சுட்டிக்காட்டிய பின்பு, கடந்த 2023 செப்டம்பர் மாதம் தான்… pic.twitter.com/2Cmp3PbZ7a
— K.Annamalai (@annamalai_k) July 24, 2025