1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநர் ராஜினாமா குறித்து அண்ணாமலை கருத்து..!

1

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை செளந்தரராஜன். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார் தமிழிசை சௌந்தரராஜன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும் தான் தமிழகத்தில் தான் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  "இப்போதைக்கு, நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. குடியரசுத் தலைவரிடமிருந்து முறையான அறிவிப்பு வெளியாகும் வரை, அரசாங்கத்திற்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து கட்சி உறுப்பினர்கள் யாரும் கருத்து தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது என்று நினைக்கிறேன். என்றார்  

Trending News

Latest News

You May Like