1. Home
  2. தமிழ்நாடு

வதந்திக்கு முற்றுப்புள்ளி : தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தார் அண்ணாமலை..!

1

தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. மேலும் , மத்திய உள்துறை அமைச்சரும், தமிழிசை சொந்தரராஜனை கண்டித்ததாகவும் தகவல் பரவியது. இந்த தருணத்தில், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில், இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும்,  மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சௌந்தரராஜன்  இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த, அக்கா அவர்களின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தன்னை சந்திக்க இல்லத்திற்கு வந்த அண்ணாமலைக்கு ‘VOICE FOR ALL' புத்தகத்தை பரிசாக வழங்கிய தமிழிசை!


 

Trending News

Latest News

You May Like