நடிகை த்ரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/8a18c371927ce877a40d9e6b9e851466.jpeg?width=836&height=470&resizemode=4)
தமிழகம் வந்த எல்.முருகனுக்கு. இன்று கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மேல தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை பேசிய அண்ணாமலை, எல்.முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளதாகவும் பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பரிந்துரையின் பேரில் அவர் மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளார் என்றார்.
மேலும் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு, நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையானது. இதுகுறித்து, பேசிய அண்ணாமலை, "கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் த்ரிஷாவை சிலர் தவறாக பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. அவரை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என த்ரிஷாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.