1. Home
  2. தமிழ்நாடு

அஞ்சாமை நடிகர்கள் விதார்த், வாணி போஜனை கைது செய்ய வேண்டும்..!

1

நீட் தேர்வால் நடக்கும் கொடுமைகளை எடுத்துரைக்கும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது அஞ்சாமை திரைப்படம்.இயக்குனர் எஸ்.பி. சுப்புராமன் இயக்கியுள்ள இப் படத்தில் நடிகர் விதார்த், நடிகை வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.  

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் மாநில காட்சிகள் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் நீட் தேர்வு அவசியமா? அதனால் ஏழை எளிய மாணவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை மையாக வைத்து உருவாகியுள்ளது அஞ்சாமை படம்.

பொதுமக்கள் பலரின் பாராட்டுக்கள் இப்படத்துக்கு குவிந்து வரும் நிலையில், தற்போது காவல்துறையில் அஞ்சாமை படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 நீட் தேர்வை தடுக்கும் வகையில் அஞ்சாமை படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது நாடு முழுதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளது. எனவே அஞ்சாமை பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் அளித்து உள்ளார்.

Trending News

Latest News

You May Like