1. Home
  2. தமிழ்நாடு

மகள் காதலித்ததால் ஆத்திரம்? சரமாரியாக வெட்டிக் கொன்ற தந்தை..!

மகள் காதலித்ததால் ஆத்திரம்? சரமாரியாக வெட்டிக் கொன்ற தந்தை..!


காதலிப்பது என்பது எந்த பெற்றோருக்கும் பிடிப்பதில்லை. சிலர் உண்மையிலே பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமே என்று பயப்படுகிறார்கள், பதறுகிறார்கள். சிலர் தங்கள் பெயர் கெட்டுவிட்டதே என்று பதறுகிரார்கள் ஆத்திரமடைகிறார்கள்.

இதில் இரண்டாவது ரக பெற்றோர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். தங்களின் கௌரவத்திற்காக பிள்ளைகளை கொலையும் செய்யத் துணிபவர்கள் இவர்களே. அப்படி ஒரு தந்தை தனது மகளை பலர் கண் முன்னே கொன்று இருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் கஜ்னர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்பன்னா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு 18வயது டீனேஜ் பெண் அந்த ஊரைச் சேர்ந்த 20 வயது வாலிபரை காதலித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் அந்த ஊரிலுள்ள வாய்க்கால், வரப்பு, தோட்டம் என்று பல இடங்களில் ஒன்றாக சுற்றினார்கள். இதனால் இவர்களின் காதல் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்தது. கடுமையான கோபமுற்ற அந்தப் பெண்ணின் தந்தை மகளின் காதலை கண்டித்தார்.

அதன் ஒரு பகுதியாக மகளை சினிமாவில் வரும் தந்தையை போல வீட்டிற்குள் வைத்து பூட்டினார். ஆனால் சம்பவத்தன்று
இரவு அந்த பெண் வீட்டின் பூட்டை உடைத்து கொண்டு அவருடைய காதலலன் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய மகளை காணாத தந்தை ஆத்திரமுற்று ஒரு கோடாரி எடுத்துக்கொண்டு மகளை தேடி, அந்த காதலன் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரின் மகள் காதலனோடு கொஞ்சிக்கொண்டிருப்பதை பார்த்ததும் கோபமுற்று மகளை, வீட்டிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு பொதுமக்கள் முன்னிலையிலேயே அந்தப் பெண்ணை துண்டு துண்டாக கோடாரியால் வெட்டி தள்ளினார்.

உடனே இந்த விஷயம் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். மகளை பொதுமக்கள் வெட்டி வீசிய தந்தையை கைது செய்தார்கள். அந்தப் பெண்ணின் காதலனுக்கும் இந்த கலவரத்தில் காயம்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like