1. Home
  2. தமிழ்நாடு

மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா! அச்சத்தில் சக எம்.எல்.ஏக்கள்!!

மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா! அச்சத்தில் சக எம்.எல்.ஏக்கள்!!


கொரோனா வைரஸ் யாரையும் விட்டுவைக்கவில்லை. சாதி, மதம், ஏழை, பணக்காரன், சாமான்யன், அதிகார பலம் மிக்கவன் என்று பாகுபாடின்றி தாக்குகிறது. 
அந்த வகையில் தெலங்கானாவில் தற்போது ஆட்சியிலுள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ. பஜிரெட்டி கோவர்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. பஜிரெட்டிக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே எம்.எல்.ஏ. பஜிரெட்டியின் மனைவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. 


பஜிரெட்டி கோவர்தன், தெலங்கானாவில் கொரோனா தொற்றுக்கு ஆளான இரண்டாவது எம்.எல்.ஏ. ஆவார். ஏற்கெனவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ. யாட்கிரி ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி, ஓட்டுநர், பாதுகாவலர், சமையற்காரர் என அனைவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் நிதியமைச்சர் ஹரிஷ் ராவின் உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஹரிஷ் ரா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கும் அவருடைய தொடர்புடைய 17 பேருக்கு கொரோனா இல்லை என முடிவு வெளிவந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like