1. Home
  2. தமிழ்நாடு

ஆபாசமாக திட்டிய ஆய்வாளர்: வேதனையில் பெண்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் புகார் !!

ஆபாசமாக திட்டிய ஆய்வாளர்: வேதனையில் பெண்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் புகார் !!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பறைகள் உள்ளது. நாள்தோறும் இந்த கழிவறைகளை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை பராமரிப்பது, சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி முதல் பொது கழிப்பிட பராமரிப்புக்காக மாத ஊதியத்துடன் ஒப்பந்ததார பராமரிப்பாளராக கடந்த 32 மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு 32 மாதங்களில் 9 மாதங்கள் மட்டும் ஊதியம் வழங்கிவுள்ளதாகவும், மீதம் உள்ள 23 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே பொது கழிப்பிட பராமரிப்பு பெண் பணியாளர்கள் பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் குடும்பம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஆபாசமாக திட்டிய ஆய்வாளர்: வேதனையில் பெண்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் புகார் !!

போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றார். அப்போது தனக்கும், இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாததுபோன்று அலட்சியமாக நகராட்சி ஆணையர் ரவி நடந்து கொண்டது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.

இதை தொடர்ந்து பண்ருட்டி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஜெயச்சந்திரனிடம் மாத ஊதியத்தை கேட்டால் நாயை விட கேவலமாக நடத்தி வேலையை விட்டு நீக்கி விடுவேன் என்று மிரட்டியதோடு, தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுவதாகவும் பொது கழிப்பிட பராமரிப்பு பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், கழிவறை பராமரிப்பாளர்கள் கூறுகையில், இதுதொடர்பாக அக்கவுண்ட் மேடத்தை பாருங்கள் என்று கூறுகின்றனர். அவரை பார்த்தால் கமிஷனரை பாருங்கள் என்று சொல்கிறார். கமிஷனரை பார்த்தால் SO-வை பாருங்கள் என்கிறார். இந்த விவகாரத்தில் நகராட்சி அதிகாரி ஜெயச்சந்திரன் எங்களை வேண்டும் என்றே அலைக்கழிக்கிறார். எனவே எங்களுக்கு மீதமுள்ள 23 மாதங்களாக நிலைவையில் உள்ள பொது கழிப்பிட பராமரிப்பு பணியாளர்களின் சம்பள தொகையை வழங்கி நிரந்தரமாக பொது கழிப்பிட பராமரிப்பு பணியாளர்களாக பணி அமர்த்த வேண்டும்.

ஆபாசமாக திட்டிய ஆய்வாளர்: வேதனையில் பெண்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் புகார் !!

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்களது கோரிக்கைகள் ஏற்கவிட்டால் நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம், பெரும் சோகத்துடன் அவர்கள் கூறினர்.

இதோடுமட்டுமல்லாமல், எங்களை தகாத வார்த்தைகளால் பேசிய நகராட்சி அதிகாரி ஜெயச்சந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொது கழிப்பிட பராமரிப்பு பணியாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like